உண்மையா?

>> Sunday, January 10, 2010





  1. பன்றிகள் உலகின் நான்காவது புத்திசாலி மிருகமாமே?


  2. பாரீஸில் வசிக்கும் மனிதர்களைவிட நாய்களின் எண்ணிக்கை அதிகமாமே?


  3. எறும்புகள் தூங்குவதில்லயாமே?


  4. பறவைகளுக்கு வியர்க்காதாமே?


  5. மனிதனால் கண்களை திறந்து கொண்டு தும்ம முடியாதாமே??

Read more...

என்னை பாதித்த கவிதை

>> Saturday, June 13, 2009
























ஜன்னலுக்கு வெளியே
காலில் சலங்கை கட்டிய
கழைக்கூத்தாடியொருவன்
ஒலிக்கும் உருமிக்கேற்ப
சாட்டையைச் சுழற்றுகிறான்.
பீறிடும் ரத்தம் பதிவாகிறதென் நோக்கியாவில்
யூ ட்யூபில் பதியலாம்
ஆர்க்குட்டில் போடலாம்
வலைப்பூவில் எழுதலாம்
N 73 என்றால் சும்மாவா?

படைப்பு : செல்வேந்திரன்

Read more...

யார் நுகர்வோர்?

>> Tuesday, June 2, 2009




ஒரு பொருளை (GOOD) அல்லது சேவையை (SERVICE) உரிய விலை(PRICE) அல்லது கட்டணம்(CHARGE) கொடுத்து சொந்த உபயோகத்திற்காக வாங்கும் அனைவரும் நுகர்வோரே!



ஒரு பொருளை பெறும்போது அதற்கான விலையை முழுதாக கொடுத்தாலும், கொடுப்பதாக உறுதியளித்தாலும், விலையின் ஒரு பகுதியை செலுத்திவிட்டு மீதியை தவணை முறையில் செலுத்துவதாக ஒப்புக்கொண்டாலும் பொருளை பெற்றவர் நுகர்வோராக கருதப்படுவார்.


இவ்வாறு ஒரு பொருளை விலை கொடுத்து அல்லது கொடுப்பதாக ஒப்புக்கொண்டு வாங்கியவர் தவிர அவருடைய அனுமதியுடன் அந்த பொருட்களை பயன்படுத்தும் அனைவரும் நுகர்வோராகவே கருதப்படுவார்.


அதேபோல, ஒரு சேவையை பெறுவதற்கு / பயன்படுத்துவதற்கு, அதற்கான கட்டணத்தை முழுமையாகவோ, தவணை முறையிலோ செலுத்துபவரும், அவ்வாறு செலுத்துவதாக ஒப்புக்கொண்டவரும் நுகர்வோராக கருதப்படுவர்.


இந்த சேவைக்கான கட்டணத்தை செலுத்துபவரின் / செலுத்த ஒப்புக் கொண்டவரின் அனுமதியுடன் பயன்படுத்தும் அனைவரும் நுகர்வோர்கள்தான்.



பொருட்களை சொந்த உபயோகத்திற்கு வாங்குபவர் மட்டுமே நுகர்வோராக கருதப்படுவார். அந்த பொருட்களை மீண்டும் விற்பதற்காகவோ, வணிக நோக்கத்திலோ வாங்குபவர் சட்டத்தின் பார்வையில் நுகர்வோராக கருதப்பட மாட்டார்.


அதேபோல சேவைகளிலும் கட்டணம் செலுத்தி சேவையை பெறுபவரே நுகர்வோராவார். இலவச சேவைகள் மற்றும் தனி ஒப்பந்தத்தின் கீழான பிரத்யேக தனிநபர் சேவைகள் ஆகியவற்றை பெறுபவர்களை நுகர்வோராக சட்டம் கருதாது.



இந்த நுகர்வோர் என்ற கருத்து தனியார் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் அரசுக்கும் பொருந்தும். அரசு நேரடியாகவோ, வேறு வகையிலோ தயாரிக்கும் / விற்பனை செய்யும் பொருட்களை (டாஸ்மாக் உட்பட) அதற்கான விலை கொடுத்து வாங்கும் அனைவரும் நுகர்வோர்கள்தான்.



அரசு நேரடியாகவோ, வேறு வகையிலோ அளிக்கும் சேவைகளை உரிய கட்டணம் செலுத்தி பயன்படு்ததும் அனைவரும் நுகர்வோர்தான். இந்த அடிப்படையில், ஒரு பொருளை - சேவையை உரிய விலை/கட்டணம் செலுத்தி வாங்கும் அனைவரும், அந்த பொருளில்/ சேவையில் குறைகள் இருந்தால் சட்டத்தின் துணையுடன் அந்த பொருளை/ சேவையை வழங்கியவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.



அரசுக்கு எதிராகவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த பொருள் / சேவை இலவசமாக வழங்கப்பட்டதாக இருக்கக்கூடாது. அதேபோல அரசோ, அரசு அதிகாரியோ தவறாக செய்த காரியத்திற்காகவோ, கடமையை செய்யத் தவறியதற்காகவோ நுகர்வோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது.


நன்றி:http://nukarvor-nalan.blogspot.com/

Read more...

பாரதப் பெண்களின் கலைகள்

>> Monday, April 6, 2009



பெண்களின் கலைகளாக 64 கலைகளை நமது பழைய நூல்கள் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளன.லலிதா சஹஸ்ரநாமத்தில் 236-வதாக வரும் நாமமான சதுஸ்சஷ்டி கலாமயி என்ற நாமம் 64 கலைகளின் ரூபமாக இருப்பவள் லலிதாம்பிகை என்று குறிப்பிடுகிறது. ரிக் வேதத்தில் பாஞ்சால மஹரிஷி இந்த 64 கலைகளைப் பற்றி முதன்முதலாகக் குறிப்பிடுகிறார். ஆக உலகின் ஆதி நூலான வேதத்திலேயே 64 கலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்! பெண்களுக்குரிய 64 கலைகளை விரிவாகக் கல்ப சூத்திரம் குறிப்பிட்டுள்ளது.


1) நாட்டியம்

2) ஔசித்யம்

3) ஓவியம்

4) வாஜித்ரம்

5) மந்திரம்

6) தந்திரம்

7) தனவ்ருஷ்டி

8) கலா விஹி

9) சம்ஸ்க்ருத வாணி

10) க்ரியா கல்பம்

11) ஞானம்

12) விஞ்ஞானம்

13) தம்பம்

14) ஜலஸ்தம்பம்

15) கீதம்

16) தாளம்

17) ஆக்ருதி கோபன்

18) ஆராம் ரோபன்

19) காவ்ய சக்தி

20) வக்ரோக்தி

21) நர லக்ஷணம்

22) கஜ பரிட்சை

23) அசுவ பரிட்சை

24) வாஸ்து சுத்தி

25) லகு வ்ருத்தி

26) சகுன விசாரம்

27) தர்மாசாரம்

28) அஞ்சன யோகம்

29) சூர்ண யோகம்

30) க்ருஹி தர்மம்

31) சுப்ரஸாதன் கர்ம

32) சோனா சித்தி

33) வர்ணிக வ்ருத்தி

34) வாக் பாடவ்

35) கர லாகவ்

36) லலித சரண்

37) தைல சுரபீகரண்

38) ப்ருத்யோபசார்

39) கோஹாசார்

40) வியாகரணம்

41) பர நிராகரண்

42) வீணா நாதம்

43) விதண்டாவாதம்

44) அங்கஸ்திதி

45) ஜனாசார்

46) கும்ப ப்ரம

47) சாரி ஸ்ரமம்

48)) ரத்னமணி பேதம்

49) லிபி பரிச்சேதம்

50) வைக்ரியா

51) காமா விஷ்கரண்

52) ரந்தன்

53)கேஸ பந்தன்

54) ஷாலி கண்டன்

55) முக மண்டன்

56) கதா கதன்

57) குஸ¤ம க்ரந்தன்

58) வர வேஷ

59) சர்வ பாஷா விசேஷ

60) வாணிஜ்ய விதி

61) போஜ்ய விதி

62) அபிதான பரிஞான்

63) ஆபூஷண தாரண்

64) அந்த்யாக்ஷ¡ரிகா


மேலே உள்ள பட்டியலை ஒரு தரம் படித்தாலேயே நம் பண்டைய பெண்மணிகள் எதிலெல்லாம் சிறந்து விளங்கினார்கள் என்பது தெரிய வரும். அவர்கள் தொடாத துறை இல்லை; வெல்லாத விஷயம் இல்லை.

Read more...

பார் கோடுகளை அறிந்து கொள்வோம்

>> Wednesday, February 11, 2009


கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் பேக்கிங் மீது பட்டை பட்டையாக கறுப்பு,வெள்ளை வரிகள் அச்சிடப்பட்டு அதன் கீழ் எண்கள் குறிக்கப்பட்டிருப்பதை அனைவரும் பார்த்திருப்போம்.இதனை “பார் கோடுகள்” என்பர். இதனை வைத்து இந்த பொருள்கள் எந்த நாட்டிலிருந்து வருகின்றன என்று அறிந்து கொள்ளலாம்.சில நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் பர்கோடுகளில் உள்ள ஆரம்ப இலக்கங்களின் விவரங்கள் இதோ...

00 - 13 : அமெரிக்கா & கனடா
30 - 37 : பிரான்ஸ்
40 - 44 : ஜெர்மனி
45 & 49 : ஜப்பான்
50 : பிரிட்டன்
54 : பெல்ஜியம்
57 : டென்மார்க்
64 : பின்லாந்து
73 : ஸ்வீடன்
76 : ஸ்விட்சர்லாந்து
84 : ஸ்பெயின்
93 : ஆஸ்திரேலியா
471 : தைவான்
480 : பிலிப்பைன்ஸ்
489 : ஹாங்காங்
690 - 692 : சைனா
729 : இஸ்ரேல்
750 : மெக்சிகோ
779 : அர்ஜெண்டினா
789 : பிரேசில்
880 : தென்கொரியா
885 : தாய்லாந்து
888 : சிங்கப்பூர்
890 : இந்தியா
893 : வியட்னாம்
899 : இந்தோனேஷியா

Read more...

திருக்குறுங்குடி தரிசனம்

>> Sunday, January 25, 2009



ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் நாளன்று புனித கோவில்களுக்கு சென்று வருவது வருடத்தின் நல்ல துவக்கமாக அமைவதால்,தற்போது நிறைய பேர் இப்படி பயணங்களை மேற்கொள்கின்றனர்.இந்த வகையில் நானும் எனது குடும்பத்துடன் கடந்த 3 வருடங்களாக ஜனவரி முதல் நாளன்று(ஆங்கிலப் புத்தாண்டை நாம் அனுசரிக்க வேண்டியதில்லை என்ற போதிலும்) சில பிரசித்தமான திருக்கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளேன்.

கடந்த 2 வருடங்களாக திருக்குறுங்குடி என்ற திருத்தலம் சென்று வருதலால் இம்முறை அந்த திருக்கோவிலைப் பற்றி இங்கு பதிவு செய்கிறேன்.

திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் நான்குநேரியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ஏர்வாடி என்னும் ஊர் வழியாக இந்த ஊருக்கு வரவேண்டும்.ஒரே திருத்தலத்தில் பெருமாள் 5 நம்பியாக அருள் பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.இவ்வூரின் முக்கிய கோவிலினுள்ளேயே பெருமாள் நின்ற நம்பியாக(சுந்தர வடிவழகுடைய நம்பி) நின்ற கோலத்திலும்,கிடந்த நம்பியாக சயன கோலத்திலும்,இருந்த நம்பியாக அமர்ந்த கோலத்திலும் காட்சியளிக்கிறார்.இந்த மூர்த்தங்கள் அனைத்துமே சிலை,அதன் மேல் சுதை,அதன் மேல் மூலிகை வண்ணம் என நிர்மாணிக்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.மெல்லிய தீப ஒளியில் வண்ணம் கொண்ட பெருமான் சேவை சாதிப்பது மனம் ஒடுங்க வைக்கும் மெய் நிகழ்வாகும்.இத்திருக்க்கோவிலினுள்ளே கிழக்கு நோக்கி சேவை சாதிக்கும் நம்பி ,மேற்கு பார்த்து கோவிலினுள்ளேயே எழுந்தருளியுள்ள மஹேந்திரகிரிநாதர் என்னும் திருப்பெயர் கொண்ட சிவபெருமானுக்கு தோற்ற்ம் அளித்த்தாக தல வரலாறு.ஆகவே இந்த வைணவக் கோவிலினுள்ளே சிவனுக்கும் தனி சன்னதி இருப்பது சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும்.பிற்காலத்தில் இதுவே சில நீடிக்கும் சர்ச்சைகளுக்கும் காரணமாகி விட்டாலும்,எளிய பக்தர்களை இவையெல்லாம் பாதிப்பதில்லை.அழகிய சிற்பங்கள் நிறைந்த இக்கோவிலினுள் ஓர் பாரம்பரியம் கண்டுகொள்ளப்படாமல் மறைந்திருக்கிறது.மூல கோபுரத்தின் உள்கூடு மரத்தினால் செய்யப்பட்டு அதனுள் அழகிய பல மரச்சிற்பங்கள் அமைந்திருப்பது மிகவும் சிறப்பாகும்.ஆனால் இதன் அருமை தெரியாத நம்மவர்கள் இதனை பாதுகாக்காதது மட்டுமல்லாமல் பராமரிக்காமலும் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.இக்கோவிலில் நம்பாடுவான் என்ற பக்தனுக்கு மோட்சத்தை அளித்த கைசிக ஏகாதசி மிகவும் பிரசித்தம். திருமங்கை ஆழ்வார் இத்தலத்தில் மோட்சமடைந்ததாக வரலாறு. பெரியாழ்வார்,திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார்,நம்மாழ்வார் ஆகியோரால் மொத்தம் 40 பாசுரங்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு.

இக்கோவிலில் அருள் பாலிக்கும் காலபைரவர் மற்றுமொரு விசேஷமாகும். பெருமாளின் மூர்த்தங்கள் போலவே பைரவரும் வண்ண கோலம் கொண்டிருப்பது தனிச்சிற்ப்பு. பைரவர் அருகே ஒளிரும் விளக்கின் ஒரு சுடர் மட்டும் காற்று அசைப்பது போல் தொடர்ந்து அசைந்து கொண்டிருக்கிறது. பைரவரின் மூச்சுக்காற்றில் சுடர் அசைவதாக ஐதீகம்.வேண்டும் வரம் தரும் காலபைரவருக்கு பூச்சட்டையும்,வடைமாலையும் பிரசித்தமான வேண்டுதல்கள். தனக்கான சன்னதி கோவிலுக்கு உள்ளேயா அல்லது வெளியேயா என்று நீதிமன்றத்திற்கும் பக்தர்களுக்கும் நடுவே காத்துக்கொண்டிருக்கும் மஹேந்திரகிரிநாதர் நிலைமை இந்து சமூகத்தில் இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும் பிழைக்கு சாட்சி.

நான்காவது நம்பி திருப்பாற்கடல் நம்பியாக அரைக் கி.மீ தொலைவில் உள்ள கோவிலில் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

ஐந்தாவது நம்பி ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மலைமீது நம்பியாற்றின் கரையிலே இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் சூழலிலே மலைமேல் நம்பியாக நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.பளிங்கு போல் பரிசுத்தமாக மலை நம்பியின் காலடியில் பாய்ந்து வரும்புனிதமான நம்பியாற்றின் குளியல் நிஜமாகவே கங்கைக்கு ஒப்பானதுதான்.இந்த புனித குளியலுக்கும் திவ்வியமான திருமாலின் தரிசனத்திற்கும் காட்டுப் பாதை பயணம் தான் சவாலான விஷயம்.சாலையே இல்லாத பாதையில் கற்களின் மீது சாகசமாக பயணிக்கும் ஜீப் பயண்ம் திகில் விரும்பிகளுக்கு உண்மையிலேயே ஒரு விருந்து தான்.”உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு” என்று சொல்ல கேட்டிருப்போம். உண்மையிலேயே இந்த பயணத்தில் உயிரை ஜீப்பின் கம்பியில் பிடித்துக்கொண்டு தான் பயணம்.தெம்பிருப்பவர்கள் நடந்தே செல்வது நலம்.

ஊரிலிருந்து 1 கி.மீ.தொலைவில் திருவட்டப்பாறை என்னும் இடத்தில் பகவான் இராமானுஜருக்கு ஒரு சன்னதி அமைந்துள்ளது.பெருமாள் இங்கு வடுக நம்பியாக இராமானுஜரை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றியதாக ஐதீகம்.இந்த சன்னதியில் பெருமாள் சீடனின் ரூபத்தில் காட்சியளிப்பதால் வைஷ்ணவ நம்பி என்றும் அழைக்கப்படுகிறார்.

பக்தி பயணமாக மட்டுமல்லாமல் மனம் மகிழும் பயணமாகவும் அமையும் இந்த ஊருக்கு வாய்ப்பிருந்தால் ஒரு முறை சென்று வாருங்களேன்.

Read more...

சமீபத்தில் ரசித்தது...

>> Sunday, January 4, 2009



எப்போதடா வருவாய்?

என் மணாளா!


திறந்தும் என் விழிகள்

எதையுமே காணவில்லை -உன்

நினைவுகளில் உறங்கியதால்!


மறந்தும் என் இதழ்கள்

மொழியொன்றும் பேசவில்லை -உன்

நினைவுகளில் இறங்கியதால்!


நினைவுகள் கலைந்திடுமோஎன்று

உள்ளங்கைகளின் உஷ்ணத்தில்

நம் நினைவுகளை இறுகப் பிடிக்கின்றேன்!


நீ அழைத்தால்

எந்தத் திசைக்கும் வந்திடும்

ஆவலில் என் பாதங்கள்!


எப்போதடா வருவாய்?

என் மணாளா!


படைப்பு

ஷூ-நிசி

Read more...

இந்த கதவிற்குப் பின்....

>> Tuesday, December 30, 2008



கதவு


பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்

ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன்

கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்

கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன
சில நேரம்
பூவிதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன

பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல

கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது

கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது

கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது
நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்கதவுகளே
தீர்மானிக்கின்றன

நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்

மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பைகூட்டுகிறது

நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்

ஜனனத்தில்
ஒருகதவுதிறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவுதிறக்கிறது

இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா

கதவுதட்டும்
ஓசை கேட்டால்
‘யார்’ என்றுகேட்காதே
ஒரு வேளைஅது
நீயாக இருக்கலாம்


-அப்துல் ரகுமானின் "பித்தன்" தொகுப்பிலிருந்து

Read more...

கதவை திற காற்று வரட்டும்

>> Wednesday, December 17, 2008


ஒரு ஜென் ஞானி, மலையையொட்டி சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கரையோரத்தில் நின்று கொண்டு நிலவின் அழகையும், நட்சத்திரங்களின் மினுமினுப்பையும் கண்டு ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார்.
அந்த நதிக்கரையோரத்தில் துன்பங்களை மட்டுமே கண்டு நொந்துபோன ஒருவன், குடிசையில் அடைந்து கொண்டு “வாழ்க்கை துக்ககரமானது! வாழ்க்கை துக்ககரமானது! என்று புலம்பிக்கொண்டிருந்தான்.
இதைக்கேட்ட ஞானி, “இல்லையப்பா. வாழ்க்கை ஆனந்தமானது. குடிசையைவிட்டு வெளியே வந்துபார். உனக்குத் தெரியும்” என்றார். துறவியின் பேச்சில் அவனுக்கு நம்பிக்கை இல்லை.
முதலில் கதவைத் திறந்து வை. காற்று உள்ளே வரட்டும். உன்னைத் தேடி வரும் தென்றல் உன்னை வெளியே கொண்டு வரும்” என்று சொன்னார் ஞானி. அதையும் அவன் கேட்கிற மாதிரி இல்லை.
உடனே அந்த ஞானி, ” அடடே….ஆபத்து! ஆபத்து! உன் குடிசையில் தீப்பிடித்துவிட்டது” என்று கத்தினார். குடிசை எரிகிறது என்றவுடன் பதறியடித்துக்கொண்டு அவன் வெளியே ஓடி வந்தான்.
வந்தவனைப் பிடித்திழுத்து வானத்தைக் காட்டினார் ஜென் ஞானி. மேலே ஒளிரும் நிலவின் அழகையும், நட்சத்திரங்களின் மின்னுவதையும், அருகே சலனமற்று ஓடும் ஆற்றையும் கண்டு பரவசப்பட்டு நின்றான்.
‘குடிசையை விட்டு வெளியே வா… அழகைக் கண்டு ஆராதிக்கலாம் என்று அழைத்தபோது அவன் குட்கவில்லை. அவனோ கடவுள் நம்பிக்கை இல்லாதவன். எனவே, ‘பரம்பொருளைக் காணலாம் மோட்சம் அடையலாம்” என்று அவனிடம் சொல்லிப் பிரயோஜனமில்லை. பிறகு அவனை எப்படித்தான் வெளியே அழைத்து வருவது?
அதற்கு அந்த ஜென் ஞானி பயன்படுத்திய டெக்கினிக்தான், “ஆபத்து! குடிசை தீப்பற்றி எரிகிறது” என்று கத்தியது.

விதை வெடிக்க பயந்தால், விருட்சம் எழாது.
புழு கூட்டைக் கிழித்து வெளியே வர பயந்தால் வண்ணத்துப்பூச்சியாய் வானில் வெளியே வர முடியாது.
நீரில் குதிக்க பயந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது.
கதவைத் திறக்க பயந்தால், காற்றை உள்ளே அனுமதிக்க முடியாது.
கதவைத் திறந்து வையுங்கள். காற்று உள்ளே வரட்டும்.


கருத்து: பரமஹம்சஸ நித்யானந்தர்.

Read more...

எளிதும் அரிதும்...

எது எளிது? எது அரிது?

* எல்லோரது முகவரி புத்தகத்திலும் இடம் பெறல் எளிது
எல்லோரது இதயத்திலும் இடம் பெறல் அரிது.

* அடுத்தவர் தவறை கண்டறிதல் எளிது.
தனது தவறை உண்ர்ந்திடல் அரிது.

* மன்னித்தல் எளிது.
மன்னிக்க வேண்டுதல் அரிது.

* விதிகளை வகுத்தல் எளிது
அதன்படி நடத்தல் அரிது.

* தவறுகள் செய்வது எளிது
தவறுகளில் பாடம் கற்பது அரிது.

Read more...

சில அலற வைக்கும் உண்மைகள்

>> Sunday, December 14, 2008

1. APPY FIZZ அருந்த எண்ணமா? சற்று யோசிக்கவும்.அதில் புற்றுநோய் காரணிகள் இருப்பதாக தகவல்.



2. கோக் அல்லது பெப்சி சாப்ப்பிடும் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ Mentos சாப்பிடவேண்டாம். ஏனெனில் இந்த இரண்டின் கலவை சயனைடாக மாறி உங்கள் உயிரை பறிக்கலாம்.


3. kurkure சாப்பிட வேண்டாம்.அதில் அதிக அளவு பிளாஸ்டிக் கலந்திருப்பதாக Times of India தகவல் தெரிவிக்கிறது.சந்தேகம் இருந்தால் kurkure வை எரித்து பார்த்தால் பிளாஸ்டிக் பொசுங்கும் வாசனை உணரலாம்.


4. கீழ்க்காணும் மாத்திரைகளை உபயோகிப்பதை தவிர்க்கவும்.
* D cold
* Vicks action- 500
* Actified
* Coldarin
* Cosome
* Nice
* Nimulid
இவையெல்லாம் வலிப்பு போன்ற நோய்களை
வரவழைக்கும் என அமெரிக்காவில் தடை
செய்யப்பட்டுள்ளனவாம்.


5. தெருவோர வியாபாரிகளிடம் அனுதாபப்பட்டு Cotton Ear Buds எதையும் வாங்கி உபயோகிக்க வேண்டாம்.ஏனெனில் இந்த Cotton Ear Buds அனைத்தும் மருத்துவமனைகளில் ஏற்கனவே உபயோகித்து கழிக்கப்பட்ட பஞ்சினால் தயாரிக்கப்படுகின்றனவாம்.இதனால் Herpes Zoster Oticus
எனும் வைரஸ் தாக்குதலுக்கு உங்கள் காதுகள் ஆளாக
நேரிடும்.


6. உங்கள் செல்பேசியினை தொடர்பு கொண்டவர் மறுமொழி தரும் வரை உங்கள் காதுகளின் அருகில் கொண்டு செல்ல வேண்டாம்.ஏனெனில் டயல் செய்தவுடன் செல்பேசி தனது உச்சபட்ச சிக்னலை
வெளியிடுகிறது(2watts = 33dbi) .


தகவல் உதவி : நண்பர் அருள்.

Read more...

கடவுள் ஏன் கல்லானான் ?

>> Friday, December 5, 2008

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிலே சொற்பொழிவாற்றப் போயிருந்தார். அங்கே ஒரு அமெரிக்கப் பெண்மணி அவரிடம் வந்தாள்.

அவரைப் பார்த்து, "இந்தியர்கள் அனைவரும் முட்டாள்கள் என்பதே எனது கருத்து" என்றாள்.

இவரும் கோபம் கொள்ளாமல் "ஏன்" என்று சாந்தமாகக் கேட்டார்.

அதற்கு அவள் " நீங்கள் முட்டாள்தனமாகக் கல்லை வைத்துகொண்டு, இதுதான் கடவுள் என்கிறீர்களே? அதனால்தான்" என்றாள்.

அவர் சிரித்தபடி, " அம்மணி, ஆதிகாலத்திலே மனிதன் நெருப்பை எப்படி உண்டாக்கினான்?." என்று கேட்டார்.

" இரண்டு கற்களை உரசித்தான் நெருப்பினை உண்டாக்கினார்கள் என்றாள். விவேகானந்தர் சிரித்தபடி, " இதனால் கல்லுக்கு மின்சார சக்தி இருக்கிறதல்லவா?அதைப் போலவே இன்று உலகெங்கும் மின்சாரம்தானே அடிப்படையாக இருக்கிறது. ஆகவே, இந்த உலகின் ஆதாரமே கல்தான்.அதைத்தான் நாங்கள் கடவுள் என்று வணங்குகிறோம்" என்று கூற அவள் வாயடைத்துப் போய்விட்டாள்.

Read more...

இன்னும் சில கவிதைகள்.

>> Thursday, December 4, 2008

" பரமக்குடி ஆயிர வைசிய துவக்க நிலையிலும்
செந்தூர் சரவணய்யர் நடுநிலையிலும்
காரப்பேட்டை நாடார் மேனிலையிலும்
மதுரை யாதவர் கல்லூரி நிலையிலும்
வருடா வருடம் சளைக்காது
சொல்லி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
'சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்,,,"
--- .மதிவண்ணன்

சுற்றிலும் முட்களிருந்தும்
சிரிப்பை விடவில்லையே-ரோஜாப் பூ
- இரா. பார்த்திபன்

Read more...

நான் ரசித்த சில ஹைக்கூ கவிதைகள்

>> Monday, November 24, 2008

என்னருகில் அமர்ந்திருப்பவர்
எழுந்திருப்பதாய் தெரியவில்லை
கர்ப்பிணிப்பெண் நிற்கிறாள்......
- எல்.இளங்கோ.
**************************************
நிமிர்ந்து நின்றது புல்
வளைத்துக் காட்டியது
ஒரே ஒரு மழைத்துளி
-ப.ஆனந்தன்
*****************************************
அப்பாவுக்கு
அறுபதனாயிரம் மனைவிகள்
இருந்தும் சந்தேகம் இல்லை.
ராமனுக்கு ஒரு மனைவி
ஆயிரம் சந்தேகங்கள்.
-கபிலன்
********************************************

Read more...

கணக்கினால் தவறிய காதல்

>> Sunday, November 23, 2008


கணக்கில் தவறு செய்ததால் காதல் பாடத்தில் ஒரு கவிஞன் தோற்றான்.காதலிப்பவர்களுக்கு ஒரு காவியம் கிடைத்தது...

இதோ அந்த காதல் தோற்றதும் காவியம் பிறந்ததும்....

குலோத்துங்கச் சோழன் மகள் அமராவதியைப் பார்த்துக் காதல் கொள்கிறான் கம்பரின் மகன் அம்பிகாபதி. அரசன் குலோத்துங்க சோழன் கோபம் கொண்டு, அம்பிகாபதியிடம் காதலை மறந்து விடும்படி கேட்கிறான். அம்பிகாபதிக்கும் அமராவதிக்கும் மனம் ஒத்த தெய்வீக காதல் இருந்தமையால் அரசனின் ஆணைக்குக் கீழ்ப்படிய இருவருமே மறுக்கின்றனர். சோழன் காதலுக்கு ஒரு போட்டி வைக்கிறான். நூறு கவிதை காமரசம் இல்லாமல் அடுத்தடுத்து பாடவேண்டும், நடுவில் காமரசம் வந்தால் மரணதண்டனை என்று அறிவிக்கிறான். அம்பிகாபதியும் தன் காதல் மேல் அத்தனை நம்பிக்கையுடன் போட்டிக்கு ஒப்புக்கொள்கிறான். சபை கூடுகிறது. புலவர் ஒட்டக்கூத்தரும் அவையில் இருக்கிறார், காதலி அமாராவதியோ திரை மறைவில் தன் காதலுக்கு ஜெயம் உண்டாகப் பிரார்த்தனை செய்கிறாள். பாடல் ஆரம்பமாகிறது. கவியரசர் கம்பரும் அங்கே மன வருத்தத்துடன் இருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் அமராவதி கைகளில் இருக்கும் பூக்களிலிருந்து ஒரு பூவை எடுத்து வைக்கிறாள். நூறாவது பாடலும் வந்தது வெற்றிக்களிப்பில் அமராவதி தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திரை மறைவிலிருந்து ஓடி வருகிறாள். அவள் அழகில் அம்பிகாபதி தன்னை மறந்து
"சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்
துற்றே அசையக் குழையூசலாட துவள் கொள் செவ்வாய்
நற்றேனிழொழுக நடன சிங்கார நடையழகில்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே" என்று பாட
அவ்வளவுதான், ஒட்டக்கூத்தர் "முதல் செய்யுள் காப்புச் செய்யுள் ஆகையால் அதைத் தவிர்த்து 99 பாடல்கள்தான் ஆகிறது. ஆகையால் இவன் போட்டியில் ஜெயிக்கவில்லை" என்றார்.
சோழனும் உடனே மரணதண்டனை பிரகடனம் செய்தான். மரணதண்டனை ஒருவருக்கும் தெரியாமல் நிறைவேற்றப்படுகிறது. தன் உயிர்க் காதலன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு அமராவதி தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.
பாடல்களை அமராவதி சரியாக எண்ணியிருந்தால் காதல் வென்றிருக்கும்.ஒரு காவியம் தோன்றாமல் போயிருக்கும்.
இக்கால காதலருக்கும் இதில் ஒரு செய்தி ஒளிந்திருக்கிறது.காதலில் வெல்ல கடைசி வரை தாக்குபிடிக்கவேண்டும்.சிறிய பிசகு கூட தோல்விக்கு இட்டு செல்லலாம்.

Read more...

சில சூஃபி கவிதைகள்

>> Friday, November 21, 2008

விரிந்த வெட்டவெளியில்
விரவி கலந்திருந்தோம்
எங்கும் நிசப்தமாய்
எதிரொலித்தன நம் குரல்கள்..

*****************************************************
நிரம்பி வழிகிறது தனிமை
நிசப்தமாய் இருக்கிறது மனம்
பேசப்படாமல் கிடக்கின்றன வார்த்தைகள்
கேட்க்கப்படாமல் உள்ளது மௌனம்

*****************************************************

Read more...

இப்படி கூட யோசிக்கலாமோ?

>> Thursday, November 20, 2008



கணிணி என்ற சொல் ஆண்பாலா இல்லை பெண்பாலா?
ஸ்பெயின் தேசத்தில் ஒரு வகுப்பில் ஆசிரியர் ஸ்பானிஷ் பொழியைப பற்றி விளக்கும்போது கூறினார் " ஸ்பானிஷ் பொழியில் பொருடகளுக்கான பெயர்கள் ஆண்பாலாகவோ அல்லது பெண்பாலாகவோ இருக்கலாம். உதாரணமாக வீடு எனற சொல் பெண்பால் பென்சில் என்ற சொல் ஆண்பால்".

ஒரு மாணவன் கேட்டான் " கணிணி எந்த பாலைச் சேர்ந்தது?"

இந்தக் கேள்விக்கு நேரடியாக விடை அளிக்காமல் ஆசிரியர் ஆண் மாணவர்களை ஒரு குழுவாகவும் பெண் மாணவர்களை மற்றொரு குழுவாகவும் பிரித்து அவர்களை விடை அளிக்கச் சொன்னார்.

ஆண்கள் குழு கணிணி என்பது பெண்பாலே என்று தீர்மானித்தது.

ஏனெனில்

1. அதன் உள் அமைப்புகளை அதனை உருவாக்கியவர் தவிர வேறு யாருக்கும் புரிவதில்லை.

2. மற்ற கணிணிகளுடன் அளவளாவ அவை பயன் படுத்தும் மொழிகள் வேறு யாருக்கும் புரிவதில்லை.

3. சிறு தவறுகள் கூட இவைகளின் ஞாபக சக்தியில் சேமிக்கப் படுகிறது பின்னால் பயன் படுத்த

4. ஒரு கணிணியை வாங்கியவுடன் அதனைச் சேர்ந்த உபகரணங்களுக்கும் நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கிறது.

பெண்கள் குழு தீர்மானித்தது கணிணி ஆண்பாலே என்று.

ஏனெனில்

1. இவைகளிடம் பல விஷயங்கள் இருந்தாலும் இவைகளால் சொந்தமாக சிந்திக்க முடியாது.

2. எந்த ஒரு விஷயத்திலும் இவைகளை முடுக்கி விட வேணடும்.

3. இவைகள் நமது பிரச்னைகளைத் தீர்க்க வல்லவை. ஆனால் பெரும்பாலும் இவைகளே பிரச்னைகளாகி விடுகின்றன.

4. ஒரு கணிணியை வாங்கத் தீர்மானித்தவுடன் மார்கெட்டில் வேறொரு மாடல் வெளி வந்து அதை வாங்க தூண்டும்.

இறுதியில் பெண்கள் குழுவே வென்றது.

இப்படியும் யோசிக்கலாமோ??????

தகவல் உதவி : மதுரை மைந்தன்.

Read more...

நான் ரசித்த கவிதை...

>> Tuesday, November 18, 2008

முரண்பாடுகள்.
போதிமரம் போதும்
புத்தனைப் புதைத்துவிடு
காப்பாற்று
தேசத்துக்குத் தீயிடு
முக்கியம்
சித்தாந்தம் எரித்துவிடு
சிலை
கவிதைக்குக் கல்லறை
உரைபோதும் பிழைப்புக்கு
மூலம் கொளுத்திவிடு
மன்னனுக்கு மகுடமிடு
மக்களுக்கு லாடமடி
நீதிமன்றம் சுத்தம்செய்
நீதிக்குக் குப்பைக்கூடை
கற்றது மற
பட்டத்துக்குச் சட்டமிடு
பெட்டி தொலைத்துவிடு
சாவி பத்திரம்
தலைவனைப் பலியிடு
பாதுகை வழிபடு
அகிம்சை காக்க
ஆயுதம் தீட்டு
பத்தினிக்கு உதை
படத்துக்குப் பூ
காதல் கவியெழுத
காமம் நாமெழுத
கற்பு முக்கியம்
கருவைக் கலை
பசியை விடு
கடிகாரம் பார்த்துண்
ஜனநாயகம் காப்பாற்று
ஜனங்களைக் கொன்றுவிடு
முரண்பாடே நடைமுறையாய்
நடைமுறையே முறண்பாடாய்ச்
சென்றுதேய்ந்திறுகின்ற சிறுவாழ்வில்
முரண்பாடெனக்குள் யாதென்று
மூளைபுரட்டி யோசித்தேன்
மிருகத்தைக் கொல்லாமல்
தேவநிலை தேடுகிறேன்.
-கவி பேரரசு வைரமுத்து.

Read more...

ஒரு ஜென் கதை..

>> Sunday, November 16, 2008

"கேளுங்கள் கொடுக்கப்படும்' - பைபிள்
கேட்பதெல்லாம் கிடைக்காது' - ஞானமொழி
கேட்டாலும் கேட்காவிட்டாலும், வேண்டியது வேண்டியபோது கொடுக்கப்படும்' - வேதம்.
இம்மூன்றையும் படித்து குழம்பிப் போன ஜென் மாணவன், குருவிடம் கேட்டான்,
"இம்மூன்றுமே ஞானக் கூற்றுகள். இதில் எது உண்மை, எது பொய்?''
குரு சொன்னார்
"மூன்றுமே உண்மை.''
குழம்பிப்போன மாணவன் "அதெப்படி மூன்றுமே உண்மையாகும்?'' எனக் கேட்டான்.
குரு, "நீ கேட்டதாலா இதயம் இயங்குகிறது. இல்லை நீ கேட்கவில்லை என்பதால் மூளை இயங்காமல் நின்றுவிடுகிறதா?ஆனால், நீ கேட்டால்தான் ருசியான உணவு கிடைக்கும். நீ கேட்டாய் என்பதற்காகக் கூரையைப் பிய்த்துக்கொண்டு பணத்தைக் கொட்டுவானா இறைவன்?'' எனக் கேட்டதற்கு, ""இல்லை'' என்றான், சீடன்.
தொடர்ந்த குரு, "தெரிந்து கொள்! உனக்குத் தேவையான எல்லா அடிப்படை விஷயங்களும், நீ கேட்காமலேயே கிடைக்கும். சுகபோகங்கள், நீ கேட்டால்தான் கிடைக்கும். அடங்காத ஆசைகள் மற்றும் தேவையற்ற காரியங்களை, நீ எவ்வளவு கேட்டுக் கொண்டாலும் அது கிடைக்காது.பார். நான் எதுவும் கேட்பதில்லை. இருந்தும் உன்னைவிட ஆனந்தமாக இருக்கிறேன். சூட்சுமம் புரிகிறதா?'' என்றார்.

Read more...

குசும்பனின் சூப்பர் கார்டூன்கள்.

>> Friday, November 14, 2008



மேலும் ரசிக்க http://kusumbuonly.blogspot.com/

Read more...

  © Blogger template Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP