Showing posts with label தகவல்கள். Show all posts
Showing posts with label தகவல்கள். Show all posts

உண்மையா?

>> Sunday, January 10, 2010





  1. பன்றிகள் உலகின் நான்காவது புத்திசாலி மிருகமாமே?


  2. பாரீஸில் வசிக்கும் மனிதர்களைவிட நாய்களின் எண்ணிக்கை அதிகமாமே?


  3. எறும்புகள் தூங்குவதில்லயாமே?


  4. பறவைகளுக்கு வியர்க்காதாமே?


  5. மனிதனால் கண்களை திறந்து கொண்டு தும்ம முடியாதாமே??

Read more...

யார் நுகர்வோர்?

>> Tuesday, June 2, 2009




ஒரு பொருளை (GOOD) அல்லது சேவையை (SERVICE) உரிய விலை(PRICE) அல்லது கட்டணம்(CHARGE) கொடுத்து சொந்த உபயோகத்திற்காக வாங்கும் அனைவரும் நுகர்வோரே!



ஒரு பொருளை பெறும்போது அதற்கான விலையை முழுதாக கொடுத்தாலும், கொடுப்பதாக உறுதியளித்தாலும், விலையின் ஒரு பகுதியை செலுத்திவிட்டு மீதியை தவணை முறையில் செலுத்துவதாக ஒப்புக்கொண்டாலும் பொருளை பெற்றவர் நுகர்வோராக கருதப்படுவார்.


இவ்வாறு ஒரு பொருளை விலை கொடுத்து அல்லது கொடுப்பதாக ஒப்புக்கொண்டு வாங்கியவர் தவிர அவருடைய அனுமதியுடன் அந்த பொருட்களை பயன்படுத்தும் அனைவரும் நுகர்வோராகவே கருதப்படுவார்.


அதேபோல, ஒரு சேவையை பெறுவதற்கு / பயன்படுத்துவதற்கு, அதற்கான கட்டணத்தை முழுமையாகவோ, தவணை முறையிலோ செலுத்துபவரும், அவ்வாறு செலுத்துவதாக ஒப்புக்கொண்டவரும் நுகர்வோராக கருதப்படுவர்.


இந்த சேவைக்கான கட்டணத்தை செலுத்துபவரின் / செலுத்த ஒப்புக் கொண்டவரின் அனுமதியுடன் பயன்படுத்தும் அனைவரும் நுகர்வோர்கள்தான்.



பொருட்களை சொந்த உபயோகத்திற்கு வாங்குபவர் மட்டுமே நுகர்வோராக கருதப்படுவார். அந்த பொருட்களை மீண்டும் விற்பதற்காகவோ, வணிக நோக்கத்திலோ வாங்குபவர் சட்டத்தின் பார்வையில் நுகர்வோராக கருதப்பட மாட்டார்.


அதேபோல சேவைகளிலும் கட்டணம் செலுத்தி சேவையை பெறுபவரே நுகர்வோராவார். இலவச சேவைகள் மற்றும் தனி ஒப்பந்தத்தின் கீழான பிரத்யேக தனிநபர் சேவைகள் ஆகியவற்றை பெறுபவர்களை நுகர்வோராக சட்டம் கருதாது.



இந்த நுகர்வோர் என்ற கருத்து தனியார் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் அரசுக்கும் பொருந்தும். அரசு நேரடியாகவோ, வேறு வகையிலோ தயாரிக்கும் / விற்பனை செய்யும் பொருட்களை (டாஸ்மாக் உட்பட) அதற்கான விலை கொடுத்து வாங்கும் அனைவரும் நுகர்வோர்கள்தான்.



அரசு நேரடியாகவோ, வேறு வகையிலோ அளிக்கும் சேவைகளை உரிய கட்டணம் செலுத்தி பயன்படு்ததும் அனைவரும் நுகர்வோர்தான். இந்த அடிப்படையில், ஒரு பொருளை - சேவையை உரிய விலை/கட்டணம் செலுத்தி வாங்கும் அனைவரும், அந்த பொருளில்/ சேவையில் குறைகள் இருந்தால் சட்டத்தின் துணையுடன் அந்த பொருளை/ சேவையை வழங்கியவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.



அரசுக்கு எதிராகவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த பொருள் / சேவை இலவசமாக வழங்கப்பட்டதாக இருக்கக்கூடாது. அதேபோல அரசோ, அரசு அதிகாரியோ தவறாக செய்த காரியத்திற்காகவோ, கடமையை செய்யத் தவறியதற்காகவோ நுகர்வோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது.


நன்றி:http://nukarvor-nalan.blogspot.com/

Read more...

பாரதப் பெண்களின் கலைகள்

>> Monday, April 6, 2009



பெண்களின் கலைகளாக 64 கலைகளை நமது பழைய நூல்கள் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளன.லலிதா சஹஸ்ரநாமத்தில் 236-வதாக வரும் நாமமான சதுஸ்சஷ்டி கலாமயி என்ற நாமம் 64 கலைகளின் ரூபமாக இருப்பவள் லலிதாம்பிகை என்று குறிப்பிடுகிறது. ரிக் வேதத்தில் பாஞ்சால மஹரிஷி இந்த 64 கலைகளைப் பற்றி முதன்முதலாகக் குறிப்பிடுகிறார். ஆக உலகின் ஆதி நூலான வேதத்திலேயே 64 கலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்! பெண்களுக்குரிய 64 கலைகளை விரிவாகக் கல்ப சூத்திரம் குறிப்பிட்டுள்ளது.


1) நாட்டியம்

2) ஔசித்யம்

3) ஓவியம்

4) வாஜித்ரம்

5) மந்திரம்

6) தந்திரம்

7) தனவ்ருஷ்டி

8) கலா விஹி

9) சம்ஸ்க்ருத வாணி

10) க்ரியா கல்பம்

11) ஞானம்

12) விஞ்ஞானம்

13) தம்பம்

14) ஜலஸ்தம்பம்

15) கீதம்

16) தாளம்

17) ஆக்ருதி கோபன்

18) ஆராம் ரோபன்

19) காவ்ய சக்தி

20) வக்ரோக்தி

21) நர லக்ஷணம்

22) கஜ பரிட்சை

23) அசுவ பரிட்சை

24) வாஸ்து சுத்தி

25) லகு வ்ருத்தி

26) சகுன விசாரம்

27) தர்மாசாரம்

28) அஞ்சன யோகம்

29) சூர்ண யோகம்

30) க்ருஹி தர்மம்

31) சுப்ரஸாதன் கர்ம

32) சோனா சித்தி

33) வர்ணிக வ்ருத்தி

34) வாக் பாடவ்

35) கர லாகவ்

36) லலித சரண்

37) தைல சுரபீகரண்

38) ப்ருத்யோபசார்

39) கோஹாசார்

40) வியாகரணம்

41) பர நிராகரண்

42) வீணா நாதம்

43) விதண்டாவாதம்

44) அங்கஸ்திதி

45) ஜனாசார்

46) கும்ப ப்ரம

47) சாரி ஸ்ரமம்

48)) ரத்னமணி பேதம்

49) லிபி பரிச்சேதம்

50) வைக்ரியா

51) காமா விஷ்கரண்

52) ரந்தன்

53)கேஸ பந்தன்

54) ஷாலி கண்டன்

55) முக மண்டன்

56) கதா கதன்

57) குஸ¤ம க்ரந்தன்

58) வர வேஷ

59) சர்வ பாஷா விசேஷ

60) வாணிஜ்ய விதி

61) போஜ்ய விதி

62) அபிதான பரிஞான்

63) ஆபூஷண தாரண்

64) அந்த்யாக்ஷ¡ரிகா


மேலே உள்ள பட்டியலை ஒரு தரம் படித்தாலேயே நம் பண்டைய பெண்மணிகள் எதிலெல்லாம் சிறந்து விளங்கினார்கள் என்பது தெரிய வரும். அவர்கள் தொடாத துறை இல்லை; வெல்லாத விஷயம் இல்லை.

Read more...

பார் கோடுகளை அறிந்து கொள்வோம்

>> Wednesday, February 11, 2009


கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் பேக்கிங் மீது பட்டை பட்டையாக கறுப்பு,வெள்ளை வரிகள் அச்சிடப்பட்டு அதன் கீழ் எண்கள் குறிக்கப்பட்டிருப்பதை அனைவரும் பார்த்திருப்போம்.இதனை “பார் கோடுகள்” என்பர். இதனை வைத்து இந்த பொருள்கள் எந்த நாட்டிலிருந்து வருகின்றன என்று அறிந்து கொள்ளலாம்.சில நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் பர்கோடுகளில் உள்ள ஆரம்ப இலக்கங்களின் விவரங்கள் இதோ...

00 - 13 : அமெரிக்கா & கனடா
30 - 37 : பிரான்ஸ்
40 - 44 : ஜெர்மனி
45 & 49 : ஜப்பான்
50 : பிரிட்டன்
54 : பெல்ஜியம்
57 : டென்மார்க்
64 : பின்லாந்து
73 : ஸ்வீடன்
76 : ஸ்விட்சர்லாந்து
84 : ஸ்பெயின்
93 : ஆஸ்திரேலியா
471 : தைவான்
480 : பிலிப்பைன்ஸ்
489 : ஹாங்காங்
690 - 692 : சைனா
729 : இஸ்ரேல்
750 : மெக்சிகோ
779 : அர்ஜெண்டினா
789 : பிரேசில்
880 : தென்கொரியா
885 : தாய்லாந்து
888 : சிங்கப்பூர்
890 : இந்தியா
893 : வியட்னாம்
899 : இந்தோனேஷியா

Read more...

சில அலற வைக்கும் உண்மைகள்

>> Sunday, December 14, 2008

1. APPY FIZZ அருந்த எண்ணமா? சற்று யோசிக்கவும்.அதில் புற்றுநோய் காரணிகள் இருப்பதாக தகவல்.



2. கோக் அல்லது பெப்சி சாப்ப்பிடும் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ Mentos சாப்பிடவேண்டாம். ஏனெனில் இந்த இரண்டின் கலவை சயனைடாக மாறி உங்கள் உயிரை பறிக்கலாம்.


3. kurkure சாப்பிட வேண்டாம்.அதில் அதிக அளவு பிளாஸ்டிக் கலந்திருப்பதாக Times of India தகவல் தெரிவிக்கிறது.சந்தேகம் இருந்தால் kurkure வை எரித்து பார்த்தால் பிளாஸ்டிக் பொசுங்கும் வாசனை உணரலாம்.


4. கீழ்க்காணும் மாத்திரைகளை உபயோகிப்பதை தவிர்க்கவும்.
* D cold
* Vicks action- 500
* Actified
* Coldarin
* Cosome
* Nice
* Nimulid
இவையெல்லாம் வலிப்பு போன்ற நோய்களை
வரவழைக்கும் என அமெரிக்காவில் தடை
செய்யப்பட்டுள்ளனவாம்.


5. தெருவோர வியாபாரிகளிடம் அனுதாபப்பட்டு Cotton Ear Buds எதையும் வாங்கி உபயோகிக்க வேண்டாம்.ஏனெனில் இந்த Cotton Ear Buds அனைத்தும் மருத்துவமனைகளில் ஏற்கனவே உபயோகித்து கழிக்கப்பட்ட பஞ்சினால் தயாரிக்கப்படுகின்றனவாம்.இதனால் Herpes Zoster Oticus
எனும் வைரஸ் தாக்குதலுக்கு உங்கள் காதுகள் ஆளாக
நேரிடும்.


6. உங்கள் செல்பேசியினை தொடர்பு கொண்டவர் மறுமொழி தரும் வரை உங்கள் காதுகளின் அருகில் கொண்டு செல்ல வேண்டாம்.ஏனெனில் டயல் செய்தவுடன் செல்பேசி தனது உச்சபட்ச சிக்னலை
வெளியிடுகிறது(2watts = 33dbi) .


தகவல் உதவி : நண்பர் அருள்.

Read more...

  © Blogger template Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP