பார் கோடுகளை அறிந்து கொள்வோம்

>> Wednesday, February 11, 2009


கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் பேக்கிங் மீது பட்டை பட்டையாக கறுப்பு,வெள்ளை வரிகள் அச்சிடப்பட்டு அதன் கீழ் எண்கள் குறிக்கப்பட்டிருப்பதை அனைவரும் பார்த்திருப்போம்.இதனை “பார் கோடுகள்” என்பர். இதனை வைத்து இந்த பொருள்கள் எந்த நாட்டிலிருந்து வருகின்றன என்று அறிந்து கொள்ளலாம்.சில நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் பர்கோடுகளில் உள்ள ஆரம்ப இலக்கங்களின் விவரங்கள் இதோ...

00 - 13 : அமெரிக்கா & கனடா
30 - 37 : பிரான்ஸ்
40 - 44 : ஜெர்மனி
45 & 49 : ஜப்பான்
50 : பிரிட்டன்
54 : பெல்ஜியம்
57 : டென்மார்க்
64 : பின்லாந்து
73 : ஸ்வீடன்
76 : ஸ்விட்சர்லாந்து
84 : ஸ்பெயின்
93 : ஆஸ்திரேலியா
471 : தைவான்
480 : பிலிப்பைன்ஸ்
489 : ஹாங்காங்
690 - 692 : சைனா
729 : இஸ்ரேல்
750 : மெக்சிகோ
779 : அர்ஜெண்டினா
789 : பிரேசில்
880 : தென்கொரியா
885 : தாய்லாந்து
888 : சிங்கப்பூர்
890 : இந்தியா
893 : வியட்னாம்
899 : இந்தோனேஷியா

Read more...

திருக்குறுங்குடி தரிசனம்

>> Sunday, January 25, 2009



ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் நாளன்று புனித கோவில்களுக்கு சென்று வருவது வருடத்தின் நல்ல துவக்கமாக அமைவதால்,தற்போது நிறைய பேர் இப்படி பயணங்களை மேற்கொள்கின்றனர்.இந்த வகையில் நானும் எனது குடும்பத்துடன் கடந்த 3 வருடங்களாக ஜனவரி முதல் நாளன்று(ஆங்கிலப் புத்தாண்டை நாம் அனுசரிக்க வேண்டியதில்லை என்ற போதிலும்) சில பிரசித்தமான திருக்கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளேன்.

கடந்த 2 வருடங்களாக திருக்குறுங்குடி என்ற திருத்தலம் சென்று வருதலால் இம்முறை அந்த திருக்கோவிலைப் பற்றி இங்கு பதிவு செய்கிறேன்.

திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் நான்குநேரியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ஏர்வாடி என்னும் ஊர் வழியாக இந்த ஊருக்கு வரவேண்டும்.ஒரே திருத்தலத்தில் பெருமாள் 5 நம்பியாக அருள் பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.இவ்வூரின் முக்கிய கோவிலினுள்ளேயே பெருமாள் நின்ற நம்பியாக(சுந்தர வடிவழகுடைய நம்பி) நின்ற கோலத்திலும்,கிடந்த நம்பியாக சயன கோலத்திலும்,இருந்த நம்பியாக அமர்ந்த கோலத்திலும் காட்சியளிக்கிறார்.இந்த மூர்த்தங்கள் அனைத்துமே சிலை,அதன் மேல் சுதை,அதன் மேல் மூலிகை வண்ணம் என நிர்மாணிக்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.மெல்லிய தீப ஒளியில் வண்ணம் கொண்ட பெருமான் சேவை சாதிப்பது மனம் ஒடுங்க வைக்கும் மெய் நிகழ்வாகும்.இத்திருக்க்கோவிலினுள்ளே கிழக்கு நோக்கி சேவை சாதிக்கும் நம்பி ,மேற்கு பார்த்து கோவிலினுள்ளேயே எழுந்தருளியுள்ள மஹேந்திரகிரிநாதர் என்னும் திருப்பெயர் கொண்ட சிவபெருமானுக்கு தோற்ற்ம் அளித்த்தாக தல வரலாறு.ஆகவே இந்த வைணவக் கோவிலினுள்ளே சிவனுக்கும் தனி சன்னதி இருப்பது சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும்.பிற்காலத்தில் இதுவே சில நீடிக்கும் சர்ச்சைகளுக்கும் காரணமாகி விட்டாலும்,எளிய பக்தர்களை இவையெல்லாம் பாதிப்பதில்லை.அழகிய சிற்பங்கள் நிறைந்த இக்கோவிலினுள் ஓர் பாரம்பரியம் கண்டுகொள்ளப்படாமல் மறைந்திருக்கிறது.மூல கோபுரத்தின் உள்கூடு மரத்தினால் செய்யப்பட்டு அதனுள் அழகிய பல மரச்சிற்பங்கள் அமைந்திருப்பது மிகவும் சிறப்பாகும்.ஆனால் இதன் அருமை தெரியாத நம்மவர்கள் இதனை பாதுகாக்காதது மட்டுமல்லாமல் பராமரிக்காமலும் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.இக்கோவிலில் நம்பாடுவான் என்ற பக்தனுக்கு மோட்சத்தை அளித்த கைசிக ஏகாதசி மிகவும் பிரசித்தம். திருமங்கை ஆழ்வார் இத்தலத்தில் மோட்சமடைந்ததாக வரலாறு. பெரியாழ்வார்,திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார்,நம்மாழ்வார் ஆகியோரால் மொத்தம் 40 பாசுரங்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு.

இக்கோவிலில் அருள் பாலிக்கும் காலபைரவர் மற்றுமொரு விசேஷமாகும். பெருமாளின் மூர்த்தங்கள் போலவே பைரவரும் வண்ண கோலம் கொண்டிருப்பது தனிச்சிற்ப்பு. பைரவர் அருகே ஒளிரும் விளக்கின் ஒரு சுடர் மட்டும் காற்று அசைப்பது போல் தொடர்ந்து அசைந்து கொண்டிருக்கிறது. பைரவரின் மூச்சுக்காற்றில் சுடர் அசைவதாக ஐதீகம்.வேண்டும் வரம் தரும் காலபைரவருக்கு பூச்சட்டையும்,வடைமாலையும் பிரசித்தமான வேண்டுதல்கள். தனக்கான சன்னதி கோவிலுக்கு உள்ளேயா அல்லது வெளியேயா என்று நீதிமன்றத்திற்கும் பக்தர்களுக்கும் நடுவே காத்துக்கொண்டிருக்கும் மஹேந்திரகிரிநாதர் நிலைமை இந்து சமூகத்தில் இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும் பிழைக்கு சாட்சி.

நான்காவது நம்பி திருப்பாற்கடல் நம்பியாக அரைக் கி.மீ தொலைவில் உள்ள கோவிலில் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

ஐந்தாவது நம்பி ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மலைமீது நம்பியாற்றின் கரையிலே இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் சூழலிலே மலைமேல் நம்பியாக நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.பளிங்கு போல் பரிசுத்தமாக மலை நம்பியின் காலடியில் பாய்ந்து வரும்புனிதமான நம்பியாற்றின் குளியல் நிஜமாகவே கங்கைக்கு ஒப்பானதுதான்.இந்த புனித குளியலுக்கும் திவ்வியமான திருமாலின் தரிசனத்திற்கும் காட்டுப் பாதை பயணம் தான் சவாலான விஷயம்.சாலையே இல்லாத பாதையில் கற்களின் மீது சாகசமாக பயணிக்கும் ஜீப் பயண்ம் திகில் விரும்பிகளுக்கு உண்மையிலேயே ஒரு விருந்து தான்.”உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு” என்று சொல்ல கேட்டிருப்போம். உண்மையிலேயே இந்த பயணத்தில் உயிரை ஜீப்பின் கம்பியில் பிடித்துக்கொண்டு தான் பயணம்.தெம்பிருப்பவர்கள் நடந்தே செல்வது நலம்.

ஊரிலிருந்து 1 கி.மீ.தொலைவில் திருவட்டப்பாறை என்னும் இடத்தில் பகவான் இராமானுஜருக்கு ஒரு சன்னதி அமைந்துள்ளது.பெருமாள் இங்கு வடுக நம்பியாக இராமானுஜரை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றியதாக ஐதீகம்.இந்த சன்னதியில் பெருமாள் சீடனின் ரூபத்தில் காட்சியளிப்பதால் வைஷ்ணவ நம்பி என்றும் அழைக்கப்படுகிறார்.

பக்தி பயணமாக மட்டுமல்லாமல் மனம் மகிழும் பயணமாகவும் அமையும் இந்த ஊருக்கு வாய்ப்பிருந்தால் ஒரு முறை சென்று வாருங்களேன்.

Read more...

சமீபத்தில் ரசித்தது...

>> Sunday, January 4, 2009



எப்போதடா வருவாய்?

என் மணாளா!


திறந்தும் என் விழிகள்

எதையுமே காணவில்லை -உன்

நினைவுகளில் உறங்கியதால்!


மறந்தும் என் இதழ்கள்

மொழியொன்றும் பேசவில்லை -உன்

நினைவுகளில் இறங்கியதால்!


நினைவுகள் கலைந்திடுமோஎன்று

உள்ளங்கைகளின் உஷ்ணத்தில்

நம் நினைவுகளை இறுகப் பிடிக்கின்றேன்!


நீ அழைத்தால்

எந்தத் திசைக்கும் வந்திடும்

ஆவலில் என் பாதங்கள்!


எப்போதடா வருவாய்?

என் மணாளா!


படைப்பு

ஷூ-நிசி

Read more...

இந்த கதவிற்குப் பின்....

>> Tuesday, December 30, 2008



கதவு


பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்

ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன்

கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்

கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன
சில நேரம்
பூவிதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன

பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல

கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது

கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது

கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது
நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்கதவுகளே
தீர்மானிக்கின்றன

நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்

மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பைகூட்டுகிறது

நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்

ஜனனத்தில்
ஒருகதவுதிறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவுதிறக்கிறது

இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா

கதவுதட்டும்
ஓசை கேட்டால்
‘யார்’ என்றுகேட்காதே
ஒரு வேளைஅது
நீயாக இருக்கலாம்


-அப்துல் ரகுமானின் "பித்தன்" தொகுப்பிலிருந்து

Read more...

கதவை திற காற்று வரட்டும்

>> Wednesday, December 17, 2008


ஒரு ஜென் ஞானி, மலையையொட்டி சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கரையோரத்தில் நின்று கொண்டு நிலவின் அழகையும், நட்சத்திரங்களின் மினுமினுப்பையும் கண்டு ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார்.
அந்த நதிக்கரையோரத்தில் துன்பங்களை மட்டுமே கண்டு நொந்துபோன ஒருவன், குடிசையில் அடைந்து கொண்டு “வாழ்க்கை துக்ககரமானது! வாழ்க்கை துக்ககரமானது! என்று புலம்பிக்கொண்டிருந்தான்.
இதைக்கேட்ட ஞானி, “இல்லையப்பா. வாழ்க்கை ஆனந்தமானது. குடிசையைவிட்டு வெளியே வந்துபார். உனக்குத் தெரியும்” என்றார். துறவியின் பேச்சில் அவனுக்கு நம்பிக்கை இல்லை.
முதலில் கதவைத் திறந்து வை. காற்று உள்ளே வரட்டும். உன்னைத் தேடி வரும் தென்றல் உன்னை வெளியே கொண்டு வரும்” என்று சொன்னார் ஞானி. அதையும் அவன் கேட்கிற மாதிரி இல்லை.
உடனே அந்த ஞானி, ” அடடே….ஆபத்து! ஆபத்து! உன் குடிசையில் தீப்பிடித்துவிட்டது” என்று கத்தினார். குடிசை எரிகிறது என்றவுடன் பதறியடித்துக்கொண்டு அவன் வெளியே ஓடி வந்தான்.
வந்தவனைப் பிடித்திழுத்து வானத்தைக் காட்டினார் ஜென் ஞானி. மேலே ஒளிரும் நிலவின் அழகையும், நட்சத்திரங்களின் மின்னுவதையும், அருகே சலனமற்று ஓடும் ஆற்றையும் கண்டு பரவசப்பட்டு நின்றான்.
‘குடிசையை விட்டு வெளியே வா… அழகைக் கண்டு ஆராதிக்கலாம் என்று அழைத்தபோது அவன் குட்கவில்லை. அவனோ கடவுள் நம்பிக்கை இல்லாதவன். எனவே, ‘பரம்பொருளைக் காணலாம் மோட்சம் அடையலாம்” என்று அவனிடம் சொல்லிப் பிரயோஜனமில்லை. பிறகு அவனை எப்படித்தான் வெளியே அழைத்து வருவது?
அதற்கு அந்த ஜென் ஞானி பயன்படுத்திய டெக்கினிக்தான், “ஆபத்து! குடிசை தீப்பற்றி எரிகிறது” என்று கத்தியது.

விதை வெடிக்க பயந்தால், விருட்சம் எழாது.
புழு கூட்டைக் கிழித்து வெளியே வர பயந்தால் வண்ணத்துப்பூச்சியாய் வானில் வெளியே வர முடியாது.
நீரில் குதிக்க பயந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது.
கதவைத் திறக்க பயந்தால், காற்றை உள்ளே அனுமதிக்க முடியாது.
கதவைத் திறந்து வையுங்கள். காற்று உள்ளே வரட்டும்.


கருத்து: பரமஹம்சஸ நித்யானந்தர்.

Read more...

எளிதும் அரிதும்...

எது எளிது? எது அரிது?

* எல்லோரது முகவரி புத்தகத்திலும் இடம் பெறல் எளிது
எல்லோரது இதயத்திலும் இடம் பெறல் அரிது.

* அடுத்தவர் தவறை கண்டறிதல் எளிது.
தனது தவறை உண்ர்ந்திடல் அரிது.

* மன்னித்தல் எளிது.
மன்னிக்க வேண்டுதல் அரிது.

* விதிகளை வகுத்தல் எளிது
அதன்படி நடத்தல் அரிது.

* தவறுகள் செய்வது எளிது
தவறுகளில் பாடம் கற்பது அரிது.

Read more...

சில அலற வைக்கும் உண்மைகள்

>> Sunday, December 14, 2008

1. APPY FIZZ அருந்த எண்ணமா? சற்று யோசிக்கவும்.அதில் புற்றுநோய் காரணிகள் இருப்பதாக தகவல்.



2. கோக் அல்லது பெப்சி சாப்ப்பிடும் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ Mentos சாப்பிடவேண்டாம். ஏனெனில் இந்த இரண்டின் கலவை சயனைடாக மாறி உங்கள் உயிரை பறிக்கலாம்.


3. kurkure சாப்பிட வேண்டாம்.அதில் அதிக அளவு பிளாஸ்டிக் கலந்திருப்பதாக Times of India தகவல் தெரிவிக்கிறது.சந்தேகம் இருந்தால் kurkure வை எரித்து பார்த்தால் பிளாஸ்டிக் பொசுங்கும் வாசனை உணரலாம்.


4. கீழ்க்காணும் மாத்திரைகளை உபயோகிப்பதை தவிர்க்கவும்.
* D cold
* Vicks action- 500
* Actified
* Coldarin
* Cosome
* Nice
* Nimulid
இவையெல்லாம் வலிப்பு போன்ற நோய்களை
வரவழைக்கும் என அமெரிக்காவில் தடை
செய்யப்பட்டுள்ளனவாம்.


5. தெருவோர வியாபாரிகளிடம் அனுதாபப்பட்டு Cotton Ear Buds எதையும் வாங்கி உபயோகிக்க வேண்டாம்.ஏனெனில் இந்த Cotton Ear Buds அனைத்தும் மருத்துவமனைகளில் ஏற்கனவே உபயோகித்து கழிக்கப்பட்ட பஞ்சினால் தயாரிக்கப்படுகின்றனவாம்.இதனால் Herpes Zoster Oticus
எனும் வைரஸ் தாக்குதலுக்கு உங்கள் காதுகள் ஆளாக
நேரிடும்.


6. உங்கள் செல்பேசியினை தொடர்பு கொண்டவர் மறுமொழி தரும் வரை உங்கள் காதுகளின் அருகில் கொண்டு செல்ல வேண்டாம்.ஏனெனில் டயல் செய்தவுடன் செல்பேசி தனது உச்சபட்ச சிக்னலை
வெளியிடுகிறது(2watts = 33dbi) .


தகவல் உதவி : நண்பர் அருள்.

Read more...

  © Blogger template Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP