முதல் வணக்கம்

>> Thursday, November 6, 2008


* பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோஎந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோசந்த மறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன் பால் தக வருமோஅந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றாம்.
* உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்உலகிற் பிறங்கும் விவகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டுங் களை கண் எவன் அந்தஉலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றாம்.
* இடர்கள் முழுதும் எவன் அருளால் எரி வீழும் பஞ்சு என மாயும்தொடரும் உயிர்கள் எவன் அருளால் சுரர் வாழ் பதியும் உறச் செய்யும்கடவுள் முதலோர்க்கு ஊறு இன்றிக் கருமம் எவனால் முடிவு உறும் அத்தடவு மருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றாம்.
* மூர்த்தி ஆகித் தலம் ஆகி முந்நீர் கங்கை முதலானதீர்த்தம் ஆகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
* செய்யும் வினையின் முதல் யாவன் செய்யப்படும் அப் பொருள் யாவன்ஐயம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்பொய் இல் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.
* வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகையவேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்கு பரநாத முடிவில் வீற்று இருக்கும் நாதன் எவன் எண் குணன் எவன் அப்போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
* மண்ணின் ஓர் ஐங் குணம் ஆகி வதிவான் எவன் நீர் இடை நான்காய்நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்அண்ணல் எவன் அக் கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.
* பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கு அரிய பரன் யாவன்பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும் அவன் யாவன்பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவானதேசன் எவன் அக் கணபதியத் திகழச் சரணம் அடைகின்றோம்.

0 comments:

  © Blogger template Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP