சமீபத்தில் ரசித்தது...
>> Sunday, January 4, 2009
எப்போதடா வருவாய்?
என் மணாளா!
திறந்தும் என் விழிகள்
எதையுமே காணவில்லை -உன்
நினைவுகளில் உறங்கியதால்!
மறந்தும் என் இதழ்கள்
மொழியொன்றும் பேசவில்லை -உன்
நினைவுகளில் இறங்கியதால்!
நினைவுகள் கலைந்திடுமோஎன்று
உள்ளங்கைகளின் உஷ்ணத்தில்
நம் நினைவுகளை இறுகப் பிடிக்கின்றேன்!
நீ அழைத்தால்
எந்தத் திசைக்கும் வந்திடும்
ஆவலில் என் பாதங்கள்!
எப்போதடா வருவாய்?
என் மணாளா!
படைப்பு
ஷூ-நிசி
3 comments:
அழகான படம்
தேடல் தெரிகிறது ...
கவிதை நன்றான உள்ளது. கவிதைக்கு படம் தேர்வு செய்து வெளியிடலாமே!
veragam pasalainoi vizhigalil melida elaguvaai varudum varthaigal arumai nanba...
Post a Comment